தாசில்தாருக்கு எதிராக புகாரளித்தவருக்கு கொலை மிரட்டல்... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2024-07-28 17:10 GMT

திருப்பத்தூர் மாவட்டம் அதனவூர் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவரது 2 ஏக்கர் நிலத்திற்கான பட்டாவில், கோவிந்தராஜ் என்பவரது பெயரை சேர்த்து முறைகேட்டில் ஈடுபட்டதாக அப்போதைய தாசில்தார் சிவப்பிரகாசம் மீது புகாரளிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கை திரும்பப் பெறும்படி தன்னை கூலிப்படையினரை வைத்து மிரட்டுவதாக குமரேசன் மற்றொரு வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து ஆகஸ்ட் 27-க்குள் விசாரணை அறிக்கை தரும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்