திறந்த இரண்டே மாதத்தில் இடிந்து விழுந்த அரசு பள்ளியின் மேற்கூரை...கொந்தளித்த பெற்றோர்

Update: 2024-09-20 02:55 GMT

செய்யாறு அருகே, 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, திறந்து 2 மாதமே ஆன அரசு நடுநிலைப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டரை கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளி கட்டடம் 65 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது. 2 தளங்களில் 4 அறைகளுடன் கட்டப்பட்ட இந்த கட்டடம் 2 மாதத்திற்கு முன்பு செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் கட்டடத்தின் இரண்டாம் தளத்தின் சிமெண்ட் மேற்கூரைபூச்சு பெயர் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக மாணவர்கள் வகுப்பறையில் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்