ஆசை ஆசையாய் வாங்கிய சமோசா... வாயில் வைத்ததும் விழுந்த `தவளை கால்' - குடலை புரட்டும் வீடியோ...

Update: 2024-09-12 17:03 GMT

ஆசை ஆசையாய் சாப்பிட வாங்கிய சமோசாவில் தவளை கால் இருந்த சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

வீட்டு சாப்பாடு போர் அடித்து விட்டது எனக் கூறி கடைகளில் ஸ்நாக்ஸ் சாப்பிட ஆசைப்படும் பலரை விழிபிதுங்கச் செய்துள்ளது இச்சம்பவம்..

உத்தரபிரதேச மாநிலம் காஜியபாத்தில் உள்ள ஒரு பிரபல இனிப்பு கடை அமைந்துள்ளது. சுத்தம் குறித்து குறை சொல்லவே முடியாத அளவிற்கு சுத்தபத்தமாக இருந்த கடையில், ஆசை ஆசையாய் சமோசா வாங்கியுள்ளார் வாடிக்கையாளர் ஒருவர்.

வீட்டிற்கு சென்று பார்த்த போது, சமோசாவிற்குள் மசாலா மட்டுமன்றி தவளையின் காலும் இருந்ததை கண்டு அதிர்ந்து போனார் வாடிக்கையாளர்.

இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் கடையின் உரிமையாளரிடம் சென்று அந்த சமோசாவை காண்பித்து முறையிட, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது..


பின்னர் வாடிக்கையாளர் தரப்பில் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்தனர் அதிகாரிகள்..

கடையில் இருந்த சமோசா மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்ட நிலையில், கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

ருசிக்கு ஆசைப்பட்டு உடல்நலத்திற்கு ஆப்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என உணர்த்தியுள்லது இச்சம்பவம்..

Tags:    

மேலும் செய்திகள்