திடீரென விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த தொழிலதிபர்.. திணறிய பயணிகள்..சென்னையில் உச்சகட்ட பரபரப்பு

Update: 2024-09-21 06:27 GMT

விமானத்தில் அவசர கால கதவை திறந்த பயணியால், 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்ல இருந்த விமானத்தில் 152 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட ஆயத்தமான் போது, திடீரென அவசர கால கதவு திறந்ததாக அபாய சத்தம் ஒலித்தது. அந்தக் கதவின் அருகே அமர்ந்திருந்த வருண் பகத் என்ற தொழிலதிபரின் கை பட்டு கதவு திறந்தது தெரிய வந்ததை அடுத்து, அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு, இரண்டு மணிநேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்