யானைகளுக்கு நடுவே தோன்றிய வானவில் - மெய்சிலிர்த்து பார்த்த மக்கள்

Update: 2024-06-29 11:15 GMT

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகளுக்கு உணவு வழங்குவதற்காக சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அப்போது யானைகள் உணவு உண்பதற்காக நிற்க்க வைக்கப்பட்டிருந்தன. அதுவரை அப்பகுதியில் சாரல் மழை பெய்த நிலையில் திடீரென மழை குறைந்து யானைகளுக்கு நடுவே வானவில் தோன்றி அழகான சூழல் உருவானது. குறிப்பாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காமாட்சி மற்றும் கிருஷ்ணா யானைகளுக்கு இடையில் வானவில் தோன்றிய காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இதனை அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்