ஓட்டுநர்கள் இடையே வெடித்த தகராறு..வழிந்த ரத்தம்.. பிளந்த மண்டை...பதற்றம்... பரபரப்பு காட்சிகள்

Update: 2024-09-22 10:09 GMT

திண்டுக்கல்லில் தனியார் பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர் இடையே ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநர் தாக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. தனியார் டேங்கர் லாரி ஓட்டுநர் சிவக்குமார், பிள்ளையார் நத்தம் பிரிவில் லாரியில் கடந்தபோது, திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பேருந்து ஓட்டுநர், லாரி அருகில் பேருந்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கைகலப்பு ஏற்பட்டு, தனியார் பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநரை கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரத்தம் வழிந்த நிலையில், லாரி ஓட்டுநர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரி ஓட்டுநரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்