ஓனரை தீர்த்துக்கட்ட வந்து வாடகைக்கு இருந்த பெண்ணை கொன்ற கும்பல் - எங்கும் கேட்டிராத பயங்கரம்

Update: 2024-05-29 07:23 GMT

வேடசந்தூர் அருகே வீட்டின் உரிமையாளரை கொல்ல வந்த கும்பல், வாடகைக்கு குடியிருந்த பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள தென்னம்பட்டியை சேர்ந்த பைரவன்-பார்வதி தம்பதி தங்கமயில் என்பவரது தோட்டத்து வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இந்தநிலையில், தங்கமயில் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜ் தரப்பினர் தங்கமயிலை கொலை செய்யும் நோக்கில் அவருடைய தோட்டத்து வீட்டுக்கு வந்துள்ளனர். அங்கு அவர் இல்லாததால் பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர். இதனை தட்டிக்கேட்ட பார்வதியை அந்த கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி விட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த வடமதுரை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இடத்தின் உரிமையாளர் இல்லாததால் வாடகைக்கு குடியிருந்த பெண்ணை வெட்டிக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்