போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் கையெடுத்து கும்பிட்டு அனுப்பிய டிஐஜி

Update: 2023-08-19 12:38 GMT

குடிநீர் கோரி மறியலில் ஈடுபட்ட மக்களை, டிஐஜி கையெடுத்து கும்பிட்டு, சமாதானப்படுத்தி, உரிய

நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோட்டை தெருவில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி, 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் கலவை - ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி காருக்கு வழி விடாமல், காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காரிலிருந்து இறங்கிய டி.ஐ.ஜி. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கையெடுத்து கும்பிட்டு சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்