தேவா மகள் இப்படி செய்தாரா? கோலிவுட்டில் புது பூகம்பம்.. தீயாய் பரவும் வீடியோ.. திடுக் பின்னணி

Update: 2024-10-23 03:37 GMT

தேவா மகள் இப்படி செய்தாரா? கோலிவுட்டில் புது பூகம்பம்.. தீயாய் பரவும் வீடியோ.. திடுக் பின்னணி


இசையமைப்பாளர் தேவாவின் மகள், தன்னை ஆட்களை ஏவி கொலை செய்ய முயல்வதாக பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு கதறியிருப்பதும், பின்னணி விசாரணையில் வெளியாகி இருக்கும் தகவல்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மகள் ஜெயப்பிரதாவின் வீட்டில் வாடைக்கு இருக்கும் தீபிகா என்ற பெண்ணின் பகீர் குற்றச்சாட்டுதான் இது..

ரவுடிகளை வீட்டிற்குள் ஏவி... தன்னை ஜெயப்பிரதா கொலை செய்ய முயன்றதாகவும், தனக்கும் தன் கணவரின் உயிருக்கும் ஏதாவது விபரீதம் நேர்ந்தால் அதற்கு இவர்கள்தான் காரணம் எனவும் இப்பெண் கதறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..

இசையமைப்பாளர் தேவாவின் மகள் ஜெயப்பிரதாவுக்கு சொந்தமாக... சென்னை, வடபழனியில் உள்ள வீட்டில் தன் கணவருடன் ஒரு வருடத்திற்கு முன் வாடகைக்கு குடியேறியிருக்கிறார் இந்த தீபிகா...

இதில், கடந்த ஒரு வருட காலமாக தீபிகா வாடகையே தரவில்லையாம்..

இதனால் ஆத்திரமடைந்த ஜெயப்பிரதா, வட பழனி காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், இரு தரப்பையும் போலீசார் அழைத்து விசாரித்திருக்கின்றனர்.

அப்போது, தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வாடகையை செலுத்த தவறியதாகவும், வாடகை முழுவதையும் மொத்தமாக திருப்பி கொடுத்து விடுவதாகவும் தீபிகா வாக்குமூலம் அளித்த நிலையில், இருவரையும் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்திருக்கின்றனர்..

இந்த சம்பவம் நடந்து 3 மாதங்கள் ஆகியிருக்கிறது..

இதன் பின்னும் தீபிகா வாடகை பாக்கியை தராததால், தேவாவின் மகள் ஜெயப்பிரதாவின் தூண்டுதலின் பேரில் மர்மநபர்கள் 7 பேரும் கத்தியுடன் வீட்டிற்குள் புகுந்து பொருள்களை அடித்து நொறுக்கி, தம்பதியை கொலை மிரட்டல் விடுத்து சென்றிருப்பதாக இந்த பகீர் குற்றச்சாட்டு...

இந்த பரபரப்பு விவகாரத்தில், சம்பவத்தின் போது அவசர அவசரமாக 100க்கு கால் செய்து போலீசாரை அழைத்த தீபிகா, சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் எழுத்துபூர்வமாக புகாரளிக்கவில்லை என போலீசார் தரப்பில் தகவல் வெளியாகி இருக்கிறது..

இந்நிலையில், இணையத்தில் பரவி வரும் வீடியோ அடிப்படையில் விசாரணையை முடுக்கி விட்டிருக்கின்றனர் போலீசார்....

Tags:    

மேலும் செய்திகள்