பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் - போலீசார் விசாரணை

Update: 2024-10-19 15:19 GMT

ஈரோட்டில் பயன்பாட்டில் இல்லாமல் உள்ள ரயில்வே குடியிருப்பில் இருந்து தூர்நாற்றம் வீச அப்பகுதி மக்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அடையாளம் தெரியாத ஆண் சடலம், பாதி எரிந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர், விரைந்து வந்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு செய்ததுடன், சடலத்தை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்