டாஸ்மாக் நிறுவனத்தின் புதிய தகவல்

Update: 2024-09-21 16:40 GMT

டாஸ்மாக் கிடங்குகளில், அடுத்த ஓராண்டிற்கு இருப்பு வைக்கப்பட உள்ள, 30 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்களை உள்ளடக்கிய மதுபான பெட்டிகளுக்கு, டாஸ்மாக் நிறுவனம் காப்பீடு செய்ய உள்ளது. டாஸ்மாக் கிடங்குகளில் உள்ள மது பாட்டில்கள் சேதம் அடைந்தால், அவற்றுக்கு 742 கோடி ரூபாய் வரை இழப்பீடு பெறும் வகையில் ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான பொதுக் காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை டாஸ்மாக் நிறுவனம் தொடங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்