திடீரென வீடு புகுந்து பொருட்களை உடைத்து கூரையை உருவும் கும்பல் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Update: 2024-06-27 06:40 GMT

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், சொத்து பிரச்சனை காரணமாக, வீட்டின் மேற்கூரை மற்றும் பொருட்களை ஒரு கும்பல் அடித்து உடைக்கும் காட்சிகள், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. விருத்தாச்சலத்தில் வசிக்கும் ஜாபர் அலி என்பவருக்கும், அவரது உறவினர் சமீர் சுகைல் என்பவருக்கும் சொத்து பிரச்சனை உள்ளது. இதுகுறித்து விருத்தாசலம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீர் சுகைலுக்கு ஆதரவாக சரவணன் என்பவர் தனது அடியாட்களுடன், ஜாபர் அலி வீட்டுக்குள் புகுந்து, பொருட்களை அடித்து உடைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்