"தின சம்பளமாக ரூ.260 மட்டுமே தருகிறார்கள்" குமுறும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் | Cuddalore

Update: 2024-10-10 14:24 GMT

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு 460 ரூபாயும் மற்றும் ஓட்டுனர்களுக்கு 750 ரூபாயும் ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்து கடலூர் மாநகராட்சியில் பணிபுரியும் சுமார் 380 ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களுக்கு

நாள் ஒன்றுக்கு 260 ரூபாயும் ஓட்டுநர்களுக்கு 400 ரூபாயும் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுவதாக வேதனை

தெரிவித்தனர். இதையடுத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த துப்பரவு தொழிலாளர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும் என்று

ஒப்பந்த துப்பரவு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்