கல்லூரி-பள்ளி பேருந்துகள் மோதி திடீர் விபத்து.. உள்ளே இருந்தவர்களின் நிலை?

Update: 2024-10-19 03:02 GMT

கல்லூரி-பள்ளி பேருந்துகள் மோதி திடீர் விபத்து.. உள்ளே இருந்தவர்களின் நிலை?

பாசார் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள தனியார் மகளிர் கல்லூரி பேருந்தும், அதே கல்லூரி வளாகத்தில் உள்ள பள்ளி பேருந்தும் அதே வழித்தடத்தில் வந்து கொண்டு இருந்த போது யார் முந்துவது என போட்டி போட்டு சென்றுள்ளன... மாசாய் கிராமத்தின் அருகே வரும் போது 2 பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், 3 கல்லூரி மாணவிகளும் 9 பள்ளி மாணவர்களும் காயமடைந்தனர்... பொதுமக்கள் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்... பேருந்துகளில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். விபத்தால் ஆத்திரமடைந்த பொது மக்கள் பேருந்தை சிறை பிடித்த நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்