நெய்வேலி NLC-ல் இளைஞர் பிணம்.. கொலையில் அதிர்ச்சி திருப்பம்.. CISF வீரர்கள் கைது

Update: 2024-10-10 08:25 GMT

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி முதலாவது சுரங்கத்தின் மண் மேட்டில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கரன் என்ற இளைஞர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அங்கு பணியாற்றிய இரண்டு மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை வீரர்கள் இறந்து போன சிவசங்கரன் உடலை சாலையில் எடுத்து வந்து போட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், சிவசங்கரனின் உறவினர்கள் திரண்டு வந்து சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், தற்போது என்எல்சி மத்திய தொழில் துறை பாதுகாப்பு படைவீரர் அனுஜ், அங்கித் சிங் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இரண்டு பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்