சிக்கன் பக்கோடாவுக்காக அப்பாவி மீது கொலைவெறி தாக்குதல்.. கண்கலங்க வைக்கும் பரிதாப வீடியோ

Update: 2024-10-11 04:46 GMT

செங்கல்பட்டு அருகே பிரியாணி கடை ஊழியரை 3 பேர் சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திம்மாவரத்தில் உள்ள பிரியாணி கடையில் ராமு என்பவர் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு மது போதையில் வந்த குமார் என்பவர் பணம் கொடுக்காமல் சிக்கன் பக்கோடா கேட்டுள்ளார். அதற்கு ராமு மறுப்பு தெரிவித்ததால் மிரட்டி விட்டுச் சென்ற குமார், தனது சகோதரர் விநாயகம் உள்ளிட்ட 3 பேருடன் வந்து ராமுவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்