திமுக கட்சி பேனர்களை கிழித்து எறிந்த திமுக தொண்டர்கள்... நெல்லையில் பரபரப்பு

Update: 2024-10-11 08:27 GMT

நெல்லை மாவட்டம் விஜயாபதி அருகே முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடம்பெற்ற பேனர்கள், திமுகவின் உட்கட்சி மோதலால் கிழிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக நிர்வாகி ரகுமான் ஆதரவாளர்கள் சார்பில், ராதாபுரம் பகுதியின் முக்கிய இடங்களில் தசரா திருவிழாவையொட்டி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ராதாபுரத்தை சேர்ந்த திமுக நிர்வாகி ஜெகதீசின் ஆதரவாளர்கள் சிலர், தாமஸ் மண்டப சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த ரகுமானின் பேனர்களை கிழித்துள்ளனர். இதுதொடர்பான ஆதாரங்களுடன் புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்