விளையாட்டாய் இறங்கி உயிரை விட்ட சென்னை இளைஞர்கள்.. "5 பேர் சவமாவது எங்ககிட்ட வரணும்"

Update: 2024-09-09 05:21 GMT

தஞ்சை மாவட்டம், பூண்டி அருகே கொள்ளிடம் ஆற்றில் 5 பேர் மூழ்கிய நிலையில், மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 2 பேரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். சென்னை சேத்துப்பட்டு நேரு பார்க் குடிசை மாற்று வாரியத்தைச் சேர்ந்த பிராங்க்ளின், ஆண்டோ, கிஷோர், கலைவேந்தன், மனோகரன் ஆகிய 5 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், கலைவேந்தன், கிஷோர், மனோகர் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்ற இருவரையும் தீயணைப்பு துறையினர் தேடி வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் நேரில் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்