"வண்டலூரில் 1000 கிலோ தந்தம் திருட்டு?" - புள்ளி விவரத்துடன் விளக்கிய பூங்கா இயக்குநர் | VandalurZoo

Update: 2024-09-21 06:40 GMT

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆயிரம் கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது என்று உயிரியல் பூங்காவின் இயக்குனர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பூங்கா இயக்குனர் ஆஷிஷ் குமார் ஸ்ரீ வத்சவா காணொளி காட்சி மூலமாக ஆஜரானார். பல்வேறு பகுதிகளில் கைப்பற்றப்பட்ட ஆயிரத்து 830 கிலோ தந்தங்கள் பத்திரப்படுத்தி வைத்துள்ளதாகவும், ஒப்பந்த பணியாளர் திருடிய ஒரு கிலோ த‌ந்தத்தையும் மீட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சம்பந்தபட்ட நபர் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆயிரம் கிலோ திருடுபோனதாக வெளியான செய்தி தவறு என்றும் விளக்கம் அளித்தார். இதையடுத்து, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள யானைத் தந்தங்களை கணக்கிட்டு, உரிய முறையை பின்பற்றி அழித்து, டிசம்பர் 2ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்