சென்னையில் ஒரே இரவில் 3 சம்பவம்..எல்லாத்தையும் செஞ்சது ஒரேயொருத்தனா?-தலையை பிய்த்துக்கொள்ளும் போலீஸ்

Update: 2024-07-16 08:47 GMT

சென்னையில் முன்னாள் காவல் அதிகாரிக்கு சொந்தமான மென்பொருள் நிறுவனம் உட்பட 3 இடங்களில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை எழும்பூர் ரெட் கிராஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் வணிக வளாகத்தில் செயல்படும், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி பாலசுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான தனியார் மென்பொருள் நிறுவனத்தில், நள்ளிரவில் பூட்டை உடைத்து 15 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இதேபோல் எழும்பூர் பகுதியில் மேலும் இரு நிறுவனங்களின் பூ​ட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையில் ஈடுபட்டது ஒரே நபரா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்