"மழை பெய்யும் போதெல்லாம் இப்படித்தான் உள்ளது" புலம்பி தள்ளும் பொதுமக்கள் | Chennai Rain
ChennaiRain, ThanthiTv
சென்னை பாரிமுனை பிரகாசம் சாலையில், முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதனால் பாரிமுனைக்கு செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை, ராயபுரம், மூலக்கொத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து
கொத்தவால்சாவடி, பிராட்வே பகுதிகளுக்கு பொதுமக்கள் வர முடியாமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் நீந்திச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.