"இடுப்பு அளவுக்கு நிற்கும் தண்ணீர்! எங்களுக்கு என்ன வழி சொல்லுங்க?" ஆதங்கத்தை கொட்டி தீர்த்த மக்கள்

Update: 2024-10-15 14:14 GMT

சென்னை பள்ளிக்கரணை காமகோட்டி நகரில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில், சிலர் தங்கள் உறவினர் வீடுகளை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர். தரைத்தளத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், பொருட்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பாக வைத்துள்ளனர். இப்பகுதியில் பால் பாக்கெட் கூட கிடைக்காமல் சிரமப்படுவதாக பெண்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்