செல்ல நாய்க்கு கல் அடி.. பழிவாங்க கொலை முயற்சி - சென்னையில் பகீர் சம்பவம்

Update: 2024-09-21 05:00 GMT

சென்னை எழும்பூரில் வளர்ப்பு நாயை கல்லால் அடித்த நபரை, சுத்தியலால் அடித்து கொல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சேகர் என்பவரை, அதே குடியிருப்பில் வசிக்கும் முனீஷ்குமார் என்பவர் சுத்தியலால் தாக்கியுள்ளார். இதையடுத்து முனிஷ்குமாரை கைது செய்து போலீசார் விசாரித்த போது, தனது நாயை சேகர் கல்லால் தாக்கியதில் முன்விரோதம் ஏற்பட்டதாகவும், அதனால் சேகரை தாக்கியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து முனிஷ் குமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்