சென்னையில் பெண்ணின் தாலி செயினை அறுத்த நபர்.. - அதிரடி ஆக்சன் காட்டிய இளைஞர்

Update: 2024-07-16 02:38 GMT

சென்னை, பெரம்பூரில் செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பியோடிய கொள்ளையரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னை பெரம்பூரை சேர்ந்த சுவாதி என்ற பெண், பெரம்பூர் பி.பி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த நபர் ஒருவர், கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார். உடனே, அவ்வழியே பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், கொள்ளையரை துரத்திச் சென்று பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்திருக்கிறார். விசாரணையில், செயின் பறிப்பில் ஈடுபட்டது வியாசர்பாடியை சேர்ந்த யுவராஜ் என்பது தெரியவர, அவரை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, கொள்ளையரிடம் இருந்து பெண்ணின் தாலிச் சங்கிலியை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்