வீடு புகுந்த கும்பல்... ரத்த வெள்ளத்தில் ஆட்டோ டிரைவர்.. சென்னையை அலறவிட்ட `கருக்கா' கார்த்திக்

Update: 2024-09-17 16:52 GMT

சென்னை, கொடுங்கையூரில், ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பரமசிவம். மூலக்கடை பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கும், சக ஆட்டோ ஓட்டுநரான கார்த்திக் என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், பரமசிவத்தை 3 பேர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. படுகாயமடைந்த பரமசிவத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், ஆட்டோவில் சவாரி ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில், பரமசிவம் தாக்கப்பட்டது தெரியவர, சரித்திர பதிவேடு குற்றவாளியான கருக்கா கார்த்திக் உட்பட மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்