சென்னையை பரபரபாக்கிய எலி கார்த்திக் - வெளியான முக்கிய தகவல்

Update: 2024-09-22 07:50 GMT

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கல்வி பயின்று வரும் இரண்டு மாணவர்கள், நமச்சிவாயபுரம் பள்ளம் பகுதியை தாண்டி சென்ற போது, ரவுடி கார்த்திக் என்னும் எலி கார்த்திக் மாணவர்களை தாக்கியுள்ளார். இதில், மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்த நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள், ரவுடி எலி கார்த்திக்கை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். ஆனால், அவர் மது போதையில் இருந்ததின் காரணமாக, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மீண்டும் வரவேண்டும் என கூறி எலி கார்த்திக்கை போலீசார் விடுதலை செய்தனர். காவல்துறையில் உத்தரவாதம்அளித்துவிட்டு வந்த எலி கார்த்திக் தற்போது தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்