16 வயது மகளுக்கு பாலியல் கொடூரம்.. பேயாக மாறி அணுஅணுவாக சீரழித்த தாய் கைது

Update: 2024-08-06 08:09 GMT

கடனை செலுத்த முடியாததால் தனது மகளையே கடன் கொடுத்தவரிடம் ஒப்படைத்த தாய் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடியை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு 40 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். கடனை கட்ட முடியாததால் தனது 16 வயது மகளை வேலைக்காக அந்த பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார். எனினும், கடன் கொடுத்த பெண் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்ததாக கூறப்படும் நிலையில், சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். தாயார் அனுமதிக்காததால் தனது சகோதரருடன் தங்கிய நிலையில், ஒரு வாரத்திற்கு முன் மீண்டும் அதே பெண்ணிடம் செல்லுமாறு தாயார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்த நிலையில், சிறுமியின் தாய், கடன் கொடுத்த பெண் உட்பட 6 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்