சென்னை மாணவி போட்ட பகீர் நாடகம்..கதையில் ட்விஸ்ட் வைத்த பேசாத காதலன்..கடுப்பான போலீஸ்..

Update: 2024-10-23 05:44 GMT

சென்னை மாணவி போட்ட பகீர் நாடகம்..கதையில் ட்விஸ்ட் வைத்த பேசாத காதலன்..கடுப்பான போலீஸ்.. காண்டான பெற்றோர் - காட்டி கொடுத்த சிசிடிவி

சென்னை ராமாபுரத்தில் கல்லூரி மாணவி பிளேடால் மர்ம நபர்கள் அறுத்ததாக அளித்த புகாரில் திடீர் திருப்பமாக, காதலன் பேசாமல் இருந்த‌தால் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், கோடம்பாக்கத்தை சேர்ந்த 17 வயது மாணவி பி.டெக். படித்து வருகிறார். இவர், கல்லூரி அருகே நின்று கொண்டிருந்த போது, முகமூடி அணிந்த நபர்கள் பிளேடால் கிழித்த‌தாக அலறியுள்ளார். அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த‌போது, அதுபோன்ற சம்பவம் நடைபெறாத‌தால், மாணவியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, மாணவி காதலித்து வரும் இளைஞர், கடந்த சில நாட்களாக பேசாமல் இருந்த‌தும், அவரை பேச வைப்பதற்காக தன்னைத்தானே பிளேடால் கிழித்துக்கொண்டு நாடகமாடியதும் அம்பலமானது. மாணவி நடத்திய நாடகத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்