சென்னையில் கொடூர ராக்கிங் கொடுமை -தோழியுடன் சென்ற ஜூனியரை நிர்வாணமாக்கி...சீனியர்கள் செய்த உச்சகட்ட விபரீதம் கண்கூசும் வீடியோவால் அதிர்ச்சி

Update: 2024-02-01 01:53 GMT

சென்னையை அடுத்த புழுதிவாக்கம் பகுதியை சேர்ந்த மாணவர்

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது தோழியை விமான நிலையத்தில் விடுவதற்காக தனது காரில் அழைத்து சென்றிருக்கிறார். இவர்களை பின் தொடர்ந்த வந்த அதே கல்லூரியில் படிக்ககூடிய சீனியர் மாணவர்கள், காரை நிறுத்தியுள்ளனர். பின்னர் தோழியை அனுப்பி விட்டு, மாணவரை காரில் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று, அவரை நிர்வாணப்படுத்தி தாக்கியும், அதனை சீனியர் மாணவர்கள் வீடியோவாகவும் எடுத்துள்ளனர். இதன் பின் மாணவரை மிரட்டி 10 ஆயிரம் ரூபாயை அவரது வங்கி கணக்கில் எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் புகார் அளித்ததன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கோவையில் தனியார் கல்லூரி மாணவரை அடித்து

தலைமுடியை வெட்டி ராகிங் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறிய நிலையில், சென்னையில் அதே பாணியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்