"காரை எடுத்தாச்சு.. முட்டு குடுத்தத யார் எடுப்பா? - சென்னை கார் ஓனர்களை துளைத்தெடுக்கும் காட்சி

Update: 2024-10-17 14:55 GMT

மழைக்காக சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்கள் எடுக்கப்பட்ட நிலையில் டயர்களில் வைத்த கற்களை கார் உரிமையாளர்கள் அப்படியே விட்டுச் சென்றதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது... மேம்பாலத்தில் இருந்து கீழே கார்கள் நகராமல் இருக்க டயர்களின் அடியில் கற்கள் வைக்கப்பட்டிருந்தன... மழை இல்லாததால் உரிமையாளர்கள் தங்கள் கார்களை மீண்டும் எடுத்துச் சென்ற நிலையில், வைத்த கற்களை அங்கேயே விட்டு விட்டு பலர் செல்கின்றனர்...

கார்களின் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட கற்கள் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தாக அமைந்துள்ளது. கார் உரிமையாளர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், வைக்கப்பட்ட கற்களை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்