"ஒரு நாள் மழை முட்டி வரை தண்ணி" - "போக வழியே இல்லை குமுறும் மக்கள்"

Update: 2024-10-17 17:31 GMT

திருவள்ளூர் அடுத்த காக்களூர் அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் வடியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மாந்தோப்பு, லட்சுமி நகர் மற்றும் பூந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் வீடுகளை மழைநீரும், கழிவுநீரும் சூழ்ந்தது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாத சூழல் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், இப்பகுதியில் முறையாக சாலை மற்றும் வடிகால் வசதிகள் செய்யப்படாததே மழைநீர் தேங்க காரணம் எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்