ஓடும் ரயிலில் விபரீதம் மேல் இருக்கை சரிந்து சிறுவன் படுகாயம்

Update: 2024-10-17 17:31 GMT

நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வாஞ்சி மணியாச்சி ரயிலில், கோவையைச் சேர்ந்த மேத்யூ, புவிதா தம்பதியினர், தங்களின் 4 வயது மகன் ஜெய்சன் மோசஸுடன் பயணம் செய்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக மேல் இருக்கை திடீரென கீழே சரிந்ததில், நான்கு வயது சிறுவனான ஜெய்சன் மோசஸ் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி ரயில் வந்த போது அவர்கள் இறங்கினர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுவன் சேர்க்கப்பட்டான். இது குறித்து ரயில்வே அதிகாரிகளும், ரயில்வே போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதே போல் அனந்தபுரி எக்ஸ்பிரஸில் பயணம் செய்த நீதிமன்ற ஊழியர் சோமசுந்தரம் என்ற பயணி உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்