பிரியாணி சாப்பிட்டதும் வாந்தி.. பார்சலுக்குள் காத்திருந்த அதிர்ச்சி - குடும்பமே ஹாஸ்பிடலில் அட்மிட்

Update: 2024-09-30 09:07 GMT

சென்னையில், உணவக பார்சல் பிரியாணியில் இறந்துகிடந்த பல்லி இருந்த நிலையில், அதனை சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகரை சேர்ந்த ராஜ்குமார், கொருக்குப்பேட்டையில் உள்ள தனியார் உணவகத்தில் பிரியாணி பார்சல் வாங்கிச் சென்றார். இதனை வீட்டில் இருந்த அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ராஜ்குமாரின் மனைவி சுவாதி மற்றும் 2 மகன்கள் வாந்தி எடுத்தனர். அப்போது, பிரியாணியில் இறந்த நிலையில் பல்லி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ராஜ்குமார், அவரது மனைவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்