ATM-களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ஸ்கெட்ச் போட்டு ரூ.1 கோடி சுருட்டல்

Update: 2024-09-24 12:07 GMT

சென்னையில் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கையாடல் செய்த புகாரில் ஊழியரை போலீசார் கைது செய்தனர்சென்னை, குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகை குமார் என்பவர் தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனம் சென்னையில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை செய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்த்த போது, நிறுவனத்தில் வேலை செய்து வந்த பிரபு உட்பட சிலர் சுமார் ஒரு கோடி ரூபாய் கையாடல் செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து மேலாளர் கார்த்திகை குமார் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணைக்கு பிறகு, வழக்கில் சம்பந்தப்பட்ட பிரபு என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 63 லட்சத்து 69 ஆயிரத்தை மீட்டனர். தலைமறைவான மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்