7 மணி நேரம்..163 பயணிகள் - சென்னை ஏர்போர்ட்-ல் நேர்ந்த சோதனை

Update: 2024-09-18 10:03 GMT

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காத்திருந்த பயணிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவு 1:30 மணிக்கு சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் செல்ல இருந்தது. இதற்காக 163 பயணிகள் உடைமைகளை சோதனை செய்துவிட்டு காத்திருந்தனர். தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்பட்டதால் ஓய்வறையில் காத்திருந்தனர். 7 மணி நேரத்திற்குப்பின் விமான நிறுவன அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உணவு, குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்