நண்பரின் 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்ற நபர் - அதிர வைக்கும் காரணம்

Update: 2024-09-20 14:25 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியை சேர்ந்த யோகராஜ்க்கு, 8 வயதில் தர்ஷன் மற்றும் 6 வயதில் யோகித் என 2 ஆண் குழந்தைகள் இருந்தன.

இந்தநிலையில் அந்த குழந்தைகளை, அவரது நண்பர் வசந்த், வீட்டிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. வெகு நேரம் ஆகியும் வசந்தும், குழந்தைகளும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்,ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில், வசந்துடன் சென்ற 2 ஆண் குழந்தைகளும் மாதனூர் அடுத்த சிங்கல்பாடி ஏரிக்கரையோரம் சடலமாக மீட்கப்பட்டனர்.

குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று ஏரிக்கரையோரம் வீசிய வசந்தை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்