புதிதாக கட்டப்பட்ட TNHB குடியிருப்பு.. பார்த்ததும் அதிர்ந்த எம்.எல்.ஏக்கள்.. | Chengalpattu

Update: 2024-08-22 11:46 GMT

செங்கல்பட்டில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் முறையாக பணிகள் செய்யாததை பார்த்து சட்டப்பேரவை குழுவினர் சராமரி கேள்வி எழுப்பினர்.

அணைக்கட்டு எம்.எல்.ஏ நந்தகுமார் தலைமையிலான சட்டமன்றப் பேரவையின் பொது நிறுவனங்கள் குழு செங்கல்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்புகளில் ஆய்வு செய்தனர். பணிகள் முடிக்கப்பட்டும் விரைவில் திறக்கப்பட உள்ள 15 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை பார்வையிட்ட போது அதிர்ச்சி அடைந்தனர். டைல்ஸ்கள் உடைந்த நிலையில் ஒட்டப்பட்டிருந்ததை கண்டு வீட்டு வசதி வாரிய அதிகாரியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய எம்.எல்.ஏக்கள், பெரும்பாலான இடங்களில் முறையாக டைல்ஸ் பதிக்காததை பார்த்து கடிந்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்