அண்ணனின் நெஞ்சை கத்தியால் குத்தி பிளந்த தம்பி.. - கும்பகோணத்தில் கொடூரம்..

Update: 2024-06-29 08:58 GMT

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே குடும்பத் தகராறில் தம்பியே அண்ணனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேல மருத்துவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது தம்பி அரவிந்தன் மது போதையில் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை தடுக்க வந்த பழனிவேலின் இடது மார்பில் அரவிந்தன் கத்தியால் பலமாக குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து விழுந்த பழனிவேல் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த அரவிந்தன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்