சென்னை ஏர்போர்ட்டில் திருப்பதி லட்டு கொண்டுசெல்ல தடை - அதிர்ச்சி காரணம்

Update: 2023-10-28 02:23 GMT

வெளிநாடு செல்வோர் எடுத்து செல்லும் இனிப்புகள் கசிந்து வெளியில் வடியும் என்றும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என கூறி ஸ்வீட் பாக்ஸ்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்படுவதாக பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தரப்பில் கூறுப்படுவதாக தெரிகிறது. பண்டிகை கால இனிப்புகள் மட்டுமின்றி திருப்பதி கோவில் லட்டு மற்றும் கோவில் பிரசாதங்களான இனிப்புகளுக்கும் எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு, சென்னையில் இருந்து இலங்கை செல்லும் விமானங்களில் உறவினர்கள் நண்பர்கள் லுங்கி, நைட்டி, வேஷ்டி, காட்டன் புடவைகள் போன்றவைகள் எடுத்துச் செல்லவும் அனுமதி மறுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்