அடையாளம் தெரியாத இளைஞர்.. கொடூர வேலையை செய்த அரக்கன்கள்

Update: 2024-09-20 02:09 GMT

ஒசூர் அடுத்த கொளதாசபுரம் கிராமத்தின் அருகே இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முகம் சிதைக்கப்பட்டு அடையாளம் தெரியாத வகையில், சடலமாக கிடந்த இளைஞரின் சடலத்தை கைப்பற்றினர். விசாரணையில் சுமார் 30 வயது மதிக்கதக்க இளைஞர் முகத்தை கத்தியால் குத்தி அடையாளம் தெரியாத வகையில் சிதைத்து கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை, கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து முழுமையான தகவல் தெரியாத நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்