காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்த அமைச்சருக்கு நேர்ந்த சோகம்

Update: 2024-06-25 03:01 GMT

டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் அதிஷி, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதற்கு, டெல்லி மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீது பாஜகவும், ஹரியானா மாநிலத்தை ஆளும் பாஜக மீது ஆம் ஆத்மி கட்சியும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், ஹரியானா மாநில அரசு தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிர‌தப் போராட்டத்தை 22ஆம் தேதி தொடங்கினார். நான்காவது நாளாக போராட்டம் தொடர்ந்த நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம் மற்றும் ர‌த்த‌த்தில் சர்க்கரை அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்