தமிழக பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..கூச்சமே இல்லாமல் ஓனர் கேட்ட விஷயம் - பாடம் புகட்டிய போலீசார்

Update: 2024-09-25 11:08 GMT

தமிழக பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..கூச்சமே இல்லாமல் ஓனர் கேட்ட விஷயம் - பாடம் புகட்டிய போலீசார்

வேலை இல்லாமல் வெளிநாட்டில் தவிப்பதாக வீடியோ வெளியிட்ட பெண்ணை, மீட்க 3 லட்சம் ரூபாய் பணம் கேட்ட கடலூரை சேர்ந்த ஏஜென்சி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை பகுதியில் ஷாஜகான் என்பவரின் ஏஜென்சி மூலம், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சங்கீதா என்ற பெண் ஓமன் நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு வேலை இல்லாமலும், சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுவதாக சில மாதங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டு, தன்னை மீட்குமாறு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து சங்கீதாவின் மகன் ஏஜென்சி உரிமையாளர் ஷாஜகானிடம் முறையிட்டபோது, 3 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் காப்பாற்ற முடியும் என்றும் மிரட்டியுள்ளார். இதையடுத்து கதிரவன் அளித்த புகார் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காட்டுமன்னார்கோவில் போலீசார், ஷாஜகானை கைது செய்தனர். மேலும், ஓமன் நாட்டில் சிக்கித் தவிக்கும் சங்கீதாவை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்