8 வயது சிறுமிக்கு 80 வயது முதியவர் பாலியல் தொல்லை.. பணத்தை வாங்கி கமுக்கமாய் இருந்த தாய்..

Update: 2024-07-25 04:37 GMT

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே, 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 80 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

கீழப்பழுவூர் அருகே வசித்து வரும் 80 முதியவரான சின்னப்பிள்ளை என்பவர், 8 வயது சிறுமியை வழிமறித்து பாலியல் ரீதியாக அத்துமீறி இருக்கிறார். இது குறித்து கீழப்பழுவூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான மருதமுத்துவிடம் சிறுமியின் தாய் புகாரளித்திருக்கிறார். இந்நிலையில், இந்த விவகாரத்தை வெளியில் சொல்லக்கூடாது என சிறுமியின் தாயை மிரட்டி, முதியவரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை மருதமுத்து வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் தகவல் செல்லவே, அரியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. புகாரை உறுதி செய்த போலீசார், முதியவர் சின்னப்பிள்ளையை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், பணம் வாங்கிக் கொண்டு விவகாரத்தை மூடி மறைத்த சிறுமியின் தாயையும், பணம் பெற்றுக் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்