அண்ணா பல்கலை. டூ ஆர்மி.. மயில்சாமி அண்ணாதுரை சொன்ன மாஸ் தகவல்

Update: 2024-07-24 18:12 GMT

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தயாரிக்கப்படும் ஆளில்லா விமானங்களை போரில் பயன்படுத்த முயற்சிகள் நடந்து வருவதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம்- எம்.ஐ.டி கல்லூரியில் பாதுகாப்பு துறையில் ட்ரோன்கள் பயன்பாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பாதுகாப்பு அமைச்சகத்தின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவது குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக, பாதுகாப்புத் துறையில், போர் முனையில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவது குறித்தும் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

அண்ணா பல்கலைகழகத்தில் தயாரிக்கப்படும் ஆளில்லா விமானங்களை போரில் பயன்படுத்த முயற்சிகள் நடந்து வருவதாக மயில்சாமி அண்ணாதுரை கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்