தடையை மீறி ஆற்றில் குளித்த இளைஞர்கள்.. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்

தடையை மீறி ஆற்றில் குளித்த இளைஞர்கள்.. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்

Update: 2021-09-11 03:56 GMT
தடையை மீறி ஆற்றில் குளித்த இளைஞர்கள்.. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் 

ஒகேனக்கல் காவிரி ஆற்று சுழலில் சிக்கி மாயமான இளைஞரை, தீயணைப்புத்துறை வீரர்கள் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே புதன்சந்தை பகுதியை சேர்ந்த ஸ்டான்லி, நண்பர்கள் பார்த்தசாரதி, சிவா ஆகியோருடன்  ஒகேனக்கல் சென்றுள்ளார். அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை மீறி சின்னாறு பரிசல்துறை காவிரி ஆற்றில் மூவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ஸ்டாலின், சுழலில் சிக்கி திடீரென தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரிசல் ஓட்டிகள், தீயணைப்பு படையினர் இளைஞரை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்