கணவனை இழந்த பெண் கதறல்.. EMI வெறியில் பைனான்ஸ் கம்பெனியின் அராஜகத்தின் உச்சம்

Update: 2024-09-29 05:36 GMT

குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சத்யா. கணவரை இழந்த இவர் டெய்லரிங் கடை வைத்துள்ளார். தனது இருசக்கர வாகனத்தை அடமானம் வைத்து கடன் வாங்கிய இவர், தவணைத்தொகையை கட்டத்தவறியுள்ளார். இதனையடுத்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் வந்துள்ளனர். பறிமுதல் செய்வதற்கு சத்யா எதிர்ப்பு தெரிவிக்கவே, இருசக்கர வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து, நிதி நிறுவன ஊழியர்கள் வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குடியாத்தம் காவல்நிலையத்தில் சத்யா புகார் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்