"26 லட்சம் குடிசைவாழ் மக்களுக்கு தலா 2 முக கவசம்" - கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னையை பொறுத்தவரை கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்புத் தேவை என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-15 09:56 GMT
கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். நாட்டிலேயே 70 ஆயிரம் மாதிரிகள் சென்னையில் மட்டும் தான் எடுக்கப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், சென்னையில் பகுதி வாரியாக கொரோனாவை கட்டுப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாகவும், பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னையில் உள்ள 650 குடிசை பகுதிகளில் வாழும் 26 லட்சம் பொது மக்களுக்கு 52 லட்சம் முகக்கவசம் தலா இரண்டு வீதம் அடுத்த 10 நாட்களுக்கு வழங்கப்படும்  என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்