குரூப் - 4 தேர்வு முறைகேடு புகார் : "பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை" - அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

குரூப்-4 தேர்வில் முறைகேடு புகார் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-07 18:55 GMT
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் பிச்சாண்டி, டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு குறித்து கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதிலளித்து பேசிய, அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், எப்போதும் வெளிப்படையாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். எனவே, குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகார்களை கவனமுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்