பெங்களூருவை மிதக்க விட்ட அசுர மழை... நீரில் மூச்சு முட்டி பலியான குழந்தைகள்

Update: 2024-10-22 09:32 GMT

பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றும் நாகம்மா என்பவரின் 13 வயது மகன் சீனிவாஸ் மற்றும் அவரது தங்கை லட்சுமி காணாமல் போனதை அடுத்து தேடும் பணி நடைபெற்றது. இருவரையும் ஏரி பக்கம் பார்த்ததாக சிலர் கூறியதை அடுத்து, தீயணைப்புத் துறையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில், சீனிவாசனின் உடலை ஏரியில் இருந்து மீட்ட நிலையில், லட்சுமியின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, குடிநீருக்கு கூட பயன்படுத்த முடியாத ஏரியில் குழந்தைகள் எதற்காக தண்ணீர் எடுக்க சென்றார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்