"வெள்ளை பேப்பரில் கையெழுத்து...கொலையை ஒப்புக்கொள்ளும்படி மிரட்டல்" - ராமநாதபுரத்தில் வெடித்த போராட்டம்

Update: 2024-10-22 09:14 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில், செய்யாத கொலையை செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி போலீசார் தங்களை தாக்கி மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். மண்டபம் பகுதியில், கடந்த 5- ஆம் தேதி மூதாட்டி ஒருவரை மர்ம நபர்கள் கொலை செய்து, நகையை பறித்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் மண்டபம் ஓம் சக்தி நகரைச் சேர்ந்த சிலரை மண்டபம் போலீசார் பிடித்து சென்று, கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள், ஊர் பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுலவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆட்சியரை நேரில் சந்தித்து தங்கள் புகார் மனுவை அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்